வணக்கம் நண்பர்களே!
திருச்சி மாவட்டம் துப்பாக்கித்தொழிற்சாலையில் நண்பர்கள் ஒன்றுப்பட்ட முயற்சியாக மணடல அளவிளான கால்பந்து போட்டி 2011 ஆகஸ்டு 18 முதல் 21 வரை மிக சிறப்பாக நடைபெற்றது. இதை பற்றி சென்ற வாரம் அம்மா அப்பா தளத்தில்
மண்டல அளவிளான கால்பந்து போட்டி(திருச்சி) ஒரு கண்ணோட்டம்...
பதிவிட்டுள்ளேன். இதைப் பற்றி அறிய மேலேயுள்ள சுட்டியை சுட்டி தெரிந்துக் கொள்ளலாம். அந்த நான்கு நாட்கள் நடந்த விளையாட்டுகளின் ஒரு சில புகைப்படங்கள் நான் எடுத்தேன். இது போன்று விளையாட்டை எடுப்பது எனக்கு இதுவே முதல் முறை அதில் சிலப்புகைப்படம் நன்றாகத்தான் இருக்கின்றது. அந்த புகைப்படங்களை உங்களோடு பகிந்துக்கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சியே!... அதேபோல் விளையாட்டுகளை புகைப்படம் எடுக்கும்பொழுது நாம் கவணிக்க வேண்டியவை என்ன? எப்படி புகைப்படம் எடுக்கலாம்? என்ற என் அனுபவங்களை உங்ளோடு பகிர்ந்தால் நல்லது என்று நினைக்கின்றேன். இது அன்று எனக்கு கிடைத்த அனுபவம் மட்டுமே....... மேலும் உங்களின் அனுபவங்களை இங்கே பகிர்ந்தால் நன்றாக இருக்கும்..... என்னை போன்று மற்றவர்களும் தெரிந்துக்கொள்வார்கள்.
கால்பந்து விளையாடும் வீரர்கள் மற்றும் பந்தின் வேகம் அதிகமாக இருக்கும்... அந்த நேரத்தில் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால்... நாம் கவணிக்க வேண்டியது ஒளி, மற்றும் வேகம். கேமராவின் கதவு வேகம் (shutter speed) குறைவாக எடுத்தால் அந்தப்படம் கலங்கலாகதான் வரும் ஏன் என்றால் ஆடுபவரின் கை கால்களின் வேகமும் தெரியும். அப்படியானால் (shutter speed) கதவின் வெகம் அதிகப்படத்த வேண்டும். ஆனால் கதவு வேகம் அதிகரிக்கும் பொழுது ஒளியின் அளவு குறைந்து படம் இருட்டாக இருக்கும். இது போன்று விளையாட்டுகளை புகைப்படம் எடுக்க கேமராவில் சிறப்பான ஒரு மோடையும் கொடுத்துள்ளார்கள். ஆனால் அதை பயன்ப்படுத்துவதில் ஒரு சிக்கல் ஒளியின் அளவு மாற்றம் கண்டபொழுது புகைப்படம் தெளிவாக கிடைக்காது.
ஒளி மற்றும் நிகழ்வு சரியாக வரவேண்டும் என்றால் நாம் (shutter priority ) தேர்ந்தெடுத்தால் நல்லது என்பது என் எண்ணம். அப்படிதான் அன்று shutter priority யை தேர்வு செய்தேன்.... shutter speed ஐ நாம் தேர்வு செய்தபின் கேமரா அதன் லென்சின் விட்டத்தை அதுவே தேர்வு செய்துவிடும்... ஒளியுன் அளவை கணக்கிட்டு லென்சின் விட்டத்தை கேமராவே தேர்வு செய்துக்கொள்ளும். அன்று அங்கு இருந்த தப்பவெப்பநிலைக்கு shutter speed 1/500 சரியாக இருந்தது. இந்த அளவு எல்லா நேரங்களிலும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்களும் செய்துப்பார்த்து கருத்துக்களை பகிர்ந்தால் எல்லோருக்கும் நன்மைக்கொடுக்கும்.
கீழே அன்று நான் எடுத்த புகைப்படங்கள் சில பதிந்துள்ளேன். மேலும் சிலப்புகைப்படம் இன்னும் சில தினங்களில் பதிவேன்... உங்களின் உண்மையான விமர்சனம்ங்களையும் மாற்றுக் கருத்துகளையும் தயங்காமல் சொல்லுங்களேன். உங்களுன் அனுபவங்களையும் சொன்னால் நல்லது.
Lighthouse Photos
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.