கான்பூசியஸ் சீனாவில் பிறந்த மிக பெரிய தத்துவஞானி. இவர் மக்களுக்கு தேவையான கோட்பாடுகளையும், அரசர்களுக்கும், அரசுக்கு தேவையான அரசாட்சி முறைகளைப்பற்றியும் எடுத்துக்கூறியவர். இவர் ஆசிரியராக பணியாற்றினார்.இவருடைய கருத்துக்கள் மன்னர்களாலும், மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது.... "இன்னும் வாழ்வதைப் பற்றியே நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை, எப்படி இறப்பைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும்" என்றவர் கான்பூசியஸ்.
இவருடைய சிலை சிங்கப்பூரில் உள்ள சீனத்தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் புகைப்படம்தான் இது.........
கண்டதும் சுட்டதும்வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.