தமிழ் திரைப்பட உலகில் முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முழு நீளத்திரைப்படம் புரட்சி தலவர் டாக்டர் எம் ஜி ஆர், அவர்கள் நடித்து இயக்கிய "உலகம் சுற்றும் வாலிபன்" என்ற திரைப்படம். கதையே இல்லாமல் கதைக்களம் மட்டுமே பாத்திரமாக கொண்டு எடுக்கப்பட்டு முழு வேற்றியை கொடுத்தது. படத்தில் எம் ஜி ஆர்.. அவர்கள் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்வதாக காட்சிகள் வரும். அப்படி சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட காட்சிகளில் ஒரு பாடலும் உண்டு. அந்தப்பாடல் "சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே" என்பது. இந்த பாடல் சிங்கப்பூரில் உள்ள "ஹவ்பர் விலா (HAW PAR VILLA)" என்ற இடத்தில் எடுக்கப்பட்டது.
ஹவ்பர் விலா (HAW PAR VILLA) என்ற இடம் தலைவலி நிவாரணி டைகர் பாம் நிருவணத்தாரால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் சிமெண்ட் காரைகளால் செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கும் சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ளது. மிக பெரிய புத்தர் சிலையும் இருக்கின்றது. இன்றும் அதே நிர்வாகம்தான் நிருவகித்து வருகின்றது. இங்குள்ள விற்பனை நிலையத்தில் முதல் தரமான டைகர் பாம் கிடைக்கும்.
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
2 comments:
அருமையான பகிர்வு:)!
பாடலை இணைத்தது இன்னும் சிறப்பு.
// ராமலக்ஷ்மி said...
அருமையான பகிர்வு:)!
பாடலை இணைத்தது இன்னும் சிறப்பு.//
வணக்கம் ராமலக்ஷ்மி
மிக்க நன்றிங்க
Post a Comment