என்னதான் அழகழகா சாலைகள் போட்டாலும் நடந்து செல்லுபவர்கள் அவற்றின் அருகே ஒரு குறுக்கு பாதை போட்டுவிடுவார்கள். எறும்பு ஊற கல்லும் தேய்ந்துவிடும் என்பதை போல மனிதன் நடந்து புல்லும் பட்டுவிடும். மனிதன் நடந்து நடந்து அந்த இடத்தில் புல்லும் வளராது, அப்படியே பல்லமாக போய்விடும். அப்படிதான் சிங்கப்பூரிலும் குறுக்காக நடந்து ஆங்காங்கே பாதைகளும் போட்டுவிடுவார்கள். இவ்வாறு உருவாகும் பாதைகளை இங்கே அரசும் தடுப்பதில்லை மாறாக அங்கே ஒரு நடைப்பாதை பொட்டு கொடுப்பார்கள்..... அப்படி போடப்பட்ட நடைப்பாதை புகைப்படங்கள்தான் கீழே கதை சொல்லுகின்றது. அப்படி போட்ட நடைப்பாதைக்கு அருகில் மற்றொரு குறுக்கு பாதையை உருவாக்கப்படும் என்பது மனிதனின் மற்றொரு வேடிக்கை.
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
12 comments:
//அப்படி போட்ட நடைப்பாதைக்கு அருகில் மற்றொரு குறுக்கு பாதையை உருவாக்கப்படும் என்பது மனிதனின் மற்றொரு வேடிக்கை.//
வேடிக்கை மட்டுமல்ல வாடிக்கையும்:)!
படங்கள் நன்றாக உள்ளன.
[[ராமலக்ஷ்மி said...
//அப்படி போட்ட நடைப்பாதைக்கு அருகில் மற்றொரு குறுக்கு பாதையை உருவாக்கப்படும் என்பது மனிதனின் மற்றொரு வேடிக்கை.//
வேடிக்கை மட்டுமல்ல வாடிக்கையும்:)!
படங்கள் நன்றாக உள்ளன.]]
உண்மைங்க அது ஒரு வாடிக்கைதான்... மிக்க நன்றிபா
சக்கரக்கட்டி, நேபாளி... எப்படிப்பா பாத்தீங்க... நினைக்கும் போதே டெரரா இருக்கு.
பிரபாகர்.
அன்பின் ஞானசேகரன்
படங்கள் அருமை - வாடிக்கையோ வேடிக்கையோ - நாம் மாற மாட்டோம் - மாறுவதற்கு காலம் பிடிக்கும்
நல்வாழ்த்துகள்
//பிரபாகர் said...
சக்கரக்கட்டி, நேபாளி... எப்படிப்பா பாத்தீங்க... நினைக்கும் போதே டெரரா இருக்கு.
பிரபாகர்.//
வாங்க பிரபாகர்,... நன்றிபா
// cheena (சீனா) said...
அன்பின் ஞானசேகரன்
படங்கள் அருமை - வாடிக்கையோ வேடிக்கையோ - நாம் மாற மாட்டோம் - மாறுவதற்கு காலம் பிடிக்கும்
நல்வாழ்த்துகள்//
வணக்கம் ஐயா.... காத்திருக்கட்டும் காலம் நமக்காகவோ அல்லது நாம் காலத்திற்காகவோ... மிக்க நன்றி ஐயா..
்
// அப்படி போட்ட நடைப்பாதைக்கு அருகில் மற்றொரு குறுக்கு பாதையை உருவாக்கப்படும் என்பது மனிதனின் மற்றொரு வேடிக்கை.//
அங்கேயுமா?
[[ இராகவன் நைஜிரியா said...
// அப்படி போட்ட நடைப்பாதைக்கு அருகில் மற்றொரு குறுக்கு பாதையை உருவாக்கப்படும் என்பது மனிதனின் மற்றொரு வேடிக்கை.//
அங்கேயுமா?]]
என்ன பன்னுறது இங்கேயும் மனிதர்கள்தானே! வாங்க நண்பா, மிக்க நன்றிங்க
நல்லா இருக்கு நண்பா இந்த புதிய தளம்!
உங்க தேடுதலுக்கு இன்னும் ஒரு வலைதளம் கூட நிர்வகிக்கலாம்...வாழ்த்துக்கள்.
இதேபோல ஒரு ஞாபகம் என் வீட்டிலும் ஞானம்.நான் இங்கு காலில் மண் ஒட்டாமல் நடந்து திரிகிறேன்.
ஊருக்குப் போகும் நேரத்திலாவது என் ஊர்க்காற்று.என் முற்றத்து மண் என்ற ஆசையோடு போவேன்.
அங்கிருப்பவர்களுக்கு அதன் ஏக்கம் புரியவில்லையோ என்னமோ.என் வீட்டிலும் அப்பா முற்றத்தில் இப்படிப் போட்டுவிட்டார்.நான் போன்நேரம் அப்பாவுக்கு நிறையச் சொல்லிச் சமாதானப்படுத்தி நடைகற்களை எடுத்துவிட்டு வந்தேன்.
//சி. கருணாகரசு said...
நல்லா இருக்கு நண்பா இந்த புதிய தளம்!
உங்க தேடுதலுக்கு இன்னும் ஒரு வலைதளம் கூட நிர்வகிக்கலாம்...வாழ்த்துக்கள்.//
வாங்க சி.கருணாகரசு,... உங்களின் வாழ்த்துதழுக்கும் பாராட்டுகளுக்கும் அன்பின் நன்றிகள்
//ஹேமா said...
இதேபோல ஒரு ஞாபகம் என் வீட்டிலும் ஞானம்.நான் இங்கு காலில் மண் ஒட்டாமல் நடந்து திரிகிறேன்.
ஊருக்குப் போகும் நேரத்திலாவது என் ஊர்க்காற்று.என் முற்றத்து மண் என்ற ஆசையோடு போவேன்.
அங்கிருப்பவர்களுக்கு அதன் ஏக்கம் புரியவில்லையோ என்னமோ.என் வீட்டிலும் அப்பா முற்றத்தில் இப்படிப் போட்டுவிட்டார்.நான் போன்நேரம் அப்பாவுக்கு நிறையச் சொல்லிச் சமாதானப்படுத்தி நடைகற்களை எடுத்துவிட்டு வந்தேன்.//
உங்களின் ஆசைகளும், ஏக்கமும் என்னால் புரிந்துக்கொள்ள முடியும்,... நானும் கொண்ட அனுபவங்களும் உண்டு. இப்படிப்பட்ட காரை தரைகளால் நிலத்தடிநீர் குறைகின்றது என்ற உண்மையும் உண்டு.... மிக்க நன்றி ஹேமா...
Post a Comment